செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

இயற்கை மருத்துவ முறைகள் !!




இயற்கை மருத்துவ முறைகள் !!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் எனது 
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் வணக்கம் !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

இறைவனால் படைக்கப்பட்ட இந்த பூமியில்
அவனருளால் உருவான அத்தனை ஜீவ
ராசிகளுக்கும் பொதுவாக ஏற்படுவதுதான் 
நோய் என்ற ஒன்றாகும். அந்த நோய்களில் 
இருந்து அந்தந்த ஜீவன்களை காப்பாற்றுவதே 
மருத்துவத்தின் இயற்கை குணமாகும்.

அதிலும் குறிப்பாக, மனித இனத்தில், இந்த 
நோய் என்பது அவரவரது இரத்த ஜீன்களில் 
பரம்பரை பரம்பரையாக என்னென்ன நோய்கள் 
நமது மூதாதையர்களிடம் இருந்ததோ, அவை
தொன்றுதொட்டு அடுத்தடுத்த பரம்பரை வம்சா 
வளியினரிடம் தொடர்கின்றது இன்றுவரை.

அப்படிப்பட்ட நோய்கள் எவை ? எவை ? அவைகளை இயற்கையாக எப்படி தடுத்து ஆட்கொள்வது என்பதைப்பற்றிய விரிவான, விளக்கமான,கட்டுரைகள், இந்த வலைதளத்தில் இடம் பெற உள்ளது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்களது மேலான ஆதரவுகளை எனது இந்தப்புதிய வலைதளத்திற்கு மனமுவந்து அளித்து எனது எழுத்துப்பணி மென்மேலும் சிறப்பு பெற உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டு இந்த அளவில் விடைபெறுகின்றேன்.

வெகுவிரைவில் எனது முதல் இடுகை இதில் வெளிவரும் என்றும் உறுதி  கூறுகிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.